சென்னை: வணிகவரித் துறை வருவாயை கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது அக்டோபர் வரை ரூ.9,229 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலகக் கூட்டரங்கில் இந்தாண்டு அக்டோபர் மாதத்துக்கான இணை ஆணையர்களின் பணித்திறன் ஆய்வுக்கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அப்போது அமைச்சர் கூறியதாவது: