கடந்த ஓராண்டில் தாக்கலான குற்றப்பத்திரிகை எண்ணிக்கையில் முரண்பாடு: மறு ஆய்வுக்கு ஐகோர்ட் உத்தரவு

4 months ago 17

மதுரை: மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கடந்த ஓராண்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை விவரங்கள் குறித்து நீதித்துறை மற்றும் காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையில் பெரியளவில் முரண்பாடு இருப்பதால் இரு துறையும் முரண்பாடுகளை சரி செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்பு பாதுகாப்பு குழுவில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறப்பு பாதுகாப்பு படை வீரர் ஜனார்த்தனன். இவர் கரோனா காலத்தில் இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்ததாக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் வரம்புக்கு உட்பட்ட 14 மாவட்ட நீதிமன்றங்களில் கடந்த ஓராண்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் மற்றும் இறுதி அறிக்கைகளின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை மாவட்ட நீதிபதிகளும், காவல்துறை தரப்பிலும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

Read Entire Article