ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்

8 months ago 25

தர்மபுரி, அக்.26: தர்மபுரி மாவட்ட ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் வரும் 13ம்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. கூட்டத்திற்கு தர்மபுரி கலெக்டர் சாந்தி தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்தில், சென்னை ஓய்வூதிய இயக்குனர் குறைகளை கேட்டறிகிறார். எனவே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வருபவர்கள், ஓய்வூதியம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை 2 பிரதிகளில் வரும் 30ம்தேதிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article