நெல்லை: தூத்துக்குடி மாவட்டத்தில் தாசில்தாராக பணியாற்றியவர் ஜெயராணி. பின்னர் துணை கலெக்டராக பதவி உயர்வு பெற்று பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றினார். திருப்பூரில் கலால் துறை உதவி ஆணையராக பணியாற்றிய போது இவரது ஜீப்பில் இருந்து லஞ்ச பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பான லஞ்ச ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது.
தற்போது நெல்லையில் வருவாய் நீதிமன்ற துணை கலெக்டராக பணியாற்றிய ஜெயராணி நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார். அவர் மீதான லஞ்ச ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளதால், அவரை ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்து வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது.
The post ஓய்வு பெறும் நாளில் நெல்லை துணை கலெக்டர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.