ஓய்வு பெற விருப்பம் தெரிவித்த விராட்.. கலாய்த்த கவுண்டி கிரிக்கெட் நிர்வாகம்.. என்ன நடந்தது..?

19 hours ago 3

லண்டன்,

கடந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல்முறையாக இந்தியா 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா 1-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை கோட்டைவிட்டது. இந்த தோல்வியினால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

இந்த தொடர்களில் முன்னணி வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் பேட்டிங் மோசமாக இருந்தது. இதனால் சீனியர் வீரர்களான இருவர் மீதும் கடும் விமர்சனம் எழுந்தது.

பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் பெர்த் போட்டியில் சதம் அடித்தாலும் விராட் கோலியின் சமீபகால ஆட்டம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. தொடர்ச்சியாக அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் பந்துகளில் விக்கெட்டை தாரைவார்த்து வருகிறார். இதனால் அவார் ஓய்வு பெற வேண்டும் என்று சொந்த நாட்டு ரசிகர்களே கடுமையாக விமர்சித்தனர்.

இதனிடையே இந்திய அணி அடுத்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

இதற்கு முன்பே ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த புதன்கிழமை திடீரென அறிவித்தார். ரோகித் சர்மா ஓய்வு முடிவை அறிவித்த சில தினங்களில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட்கோலியும் டெஸ்டில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார்.

இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை விராட்கோலி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனான விராட்கோலி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் அவரது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல முன்னாள் வீரர்களும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறக்கூடாது என்று சமூக வலைதளம் மூலம் தங்களது விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்தின் கவுன்டி கிரிக்கெட் நிர்வாகம் தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு விராட் கோலியை கலாய்த்துள்ளது. அதில், இங்கிலாந்தில் நடைபெற்ற சமீபத்திய கவுண்டி போட்டிகளில் நிறைய பேட்ஸ்மேன்கள் அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் பந்துகளால் போல்ட் மற்றும் கேட்ச் முறையில் விக்கெட்டுகளை இழந்தனர். அந்த விக்கெட்டுகளை ஒன்றாக சேர்த்து கவுண்டி நிர்வாகம் வீடியோவாக பதிவிட்டுள்ளது.

அத்துடன் அந்த வீடியோவின் தலைப்பில் "நாங்கள் உங்களை குறை சொல்லவில்லை விராட்" என்று பதிவிட்டுள்ளது.

We don't blame you Virat https://t.co/cwuevL7Lrs pic.twitter.com/kK86e3AGHE

— Rothesay County Championship (@CountyChamp) May 10, 2025
Read Entire Article