சென்னை: அண்ணாசாலையில் உள்ள ஓட்டலுக்கு ஆய்வுக்கு வந்தபோது, உடல்நிலை சரியில்லாததால் திரும்பிச் சென்றதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் விளக்கமளித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பிரியாணி கடையில் சாப்பிட்டவர்கள் சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அந்தக் கடையை சோதனை செய்ய வந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், கடையின் உரிமையாளர்களைத் தொடர்புகொள்ள முடியாததால் கடையை தற்காலிகமாக பூட்டிவிட்டு சென்றனர். அதேபோல் அண்ணாசாலையில் உள்ள மற்றொரு ஓட்டல் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.