ஓசூர் பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் குடைமிளகாய்: நேரடி விற்பனைக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

7 months ago 20

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், கெலமங்கலம், பைரமங்கலம், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பீன்ஸ், கேரட், முள்ளங்கி, குடைமிளகாய் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இதில், 90 நாட்களில் அறுவடைக்குக் கிடைக்கும் குடை மிளகாயை சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவுக்கு மேல், பசுமைக் குடில்கள் அமைத்து விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

துரித உணவகங்களில் குடைமிளகாயின் தேவை அதிகரித்துள்ளதால், ஓசூர் பகுதியிலிருந்து உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களுக்குக் குடைமிளகாய் விற்பனைக்குச் செல்கிறது. வடமாநிலங்களில் உற்பத்தியாகும் குடைமிளகாய் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, வட மாநிலங்களில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வடமாநிலங்களிலிருந்து வெளிநாடுகளுக்கு குடைமிளகாய் ஏற்றுமதி குறைந்துள்ளது. எனவே, ஓசூர் பகுதியிலிருந்து அதிக அளவில் குடை மிளகாய் வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு செல்கிறது.

Read Entire Article