ஓசூர், மார்ச் 1: ஓசூரில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தேசம் தழுவிய அளவில் திறன் மிக்க தலைவர்களை உருவாக்கும் நோக்கத்தோடு லீடர்ஷிப் எஜூகேஷன் அண்ட் டெவலப்மெண்ட் என்ற தலைப்பில் ‘தலைவர்கள் சங்கமம்’ தலைமைத்துவ பயிற்சி முகாம் நடந்தது. இதற்கு, மாவட்ட தலைவர் ஷபியுல்லா தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் ஷப்பீர் அஹமத் வரவேற்றார். நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் ஜாவித் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிடியு தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் ஆசாத், எஸ்டிபிஐ கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் அஸ்கர்அலி கலந்து கொண்டு தலைமைத்துவ பயிற்சி வகுப்பு எடுத்தனர். நிகழ்ச்சியில், எஸ்டிபிஐ கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொருளாளர் கலீம், செயற்குழு உறுப்பினர் இம்ரான், தலி தொகுதி தலைவர் பாரூக் அஹமத், ஓசூர் தொகுதி தலைவர் இம்தியாஸ், வேப்பனப்பள்ளி மேற்கு தொகுதி தலைவர் சமீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணை தலைவர் ஷாநவாஸ் நன்றி கூறினார்.
The post ஓசூரில் எஸ்டிபிஐ கட்சி கூட்டம் appeared first on Dinakaran.