தென்காசி: தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஒவ்வொரு தொகுதியிலும் 2 லட்சம் வாக்குகள் உள்ளதால், விஜய் தமிழக முதல்வராவது உறுதி என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கூறினார்.
தவெக தலைவர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கட்சி பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் ஆனந்த் பேசியதாவது: தவெக முன்னேறிக் கொண்டிருக்கிறது. சாதாரண மக்கள், தொழிலாளர்கள் நம்மிடம் உள்ளனர். நமக்கு விலாசம், மூச்சு எல்லாமே விஜய்தான். கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைக்கக்கூடாது என்று விஜய் கூறியுள்ளார். அவர் சொல்படி அனைவரும் செயல்பட வேண்டும்.