வேலூர்: “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது எல்லாம் எந்தக் காலத்திலும் நடக்காது. ” என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லூரில் ரூ.1.20 கோடி மதிப்பில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்.