சென்னை: ஒரு தலைப்புக்குள் சுருக்கிட முடியாத பன்முக திறன் கொண்டவர் கலைஞர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; கலைஞர் நடத்தியுள்ள விவாதங்கள் அழகான, ஆழமான கருத்து மோதல்கள். தனது வாழ்நாளில் 80 ஆண்டுகள் பொதுவாழ்வுக்கு ஒப்படைத்த மாபெரும் தலைவர் கலைஞர். 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
The post ஒரு தலைப்புக்குள் சுருக்கிட முடியாத பன்முக திறன் கொண்டவர் கலைஞர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!! appeared first on Dinakaran.