ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்

2 days ago 5

ஜெயங்கொண்டம், ஜூன் 4: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஒன்றிய அரசின் மக்கள் மற்றும் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அனைத்து மத்திய தொழிற்சங்கம் சார்பாக வரும் ஜூலை 9ல் நாடு தழுவிய கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்கும், பொது வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி தமிழகம் தழுவிய இந்த தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஏஐடியுசி, சிஐடியு, தொமுச, ஐஎன்டியூசி, ஹெச்எம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் தண்டபாணி, தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் துரைசாமி ஆகியோர் தலைமை உரையாற்றினர்.

தொமுச அரசு போக்குவரத்து கழக கிளை தலைவர் கொளஞ்சி, அரசு சிமெண்ட் ஆலை சின்னையன், ஏஐடியுசி ஜெயங்கொண்டம் நகராட்சி ஜெயா, சீதா, ராணி மற்றும் சிஐடியு, ஏஐடியுசி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல், அரியலூர் தேரடியில் ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தண்டபாணி, மகேந்திரன், துரைசாமி, விஜயகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

The post ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article