கோவை, பிப். 18: ஒன்றிய கல்வித்துறை அமைச்சரை கண்டித்து அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர முடியாது என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதாப் அண்மையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை கோவை கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்து இந்திய மாணவர்கள் பெருமன்றம் ஆகியோர் சேர்ந்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதாப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
The post ஒன்றிய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.