ஒடிசாவில் சார் ஆட்சியராக பணியாற்றி வரும் திமான் சக்மா தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை லஞ்சமாக பெறும்போது பிடிபட்டார்

2 hours ago 3

புவனேஸ்வர்: 2021-பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான திமான் சக்மா ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள தர்மகர் துணை ஆட்சியராக உள்ள உள்ளார். இவர் ஒடிசாவில் ஒரு தொழிலதிபரிடம் இருந்து ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, ​​லஞ்சஒழிப்பு துறையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.

ஐஏஎஸ் அதிகாரியான திமான் சக்மா ஒடிசாவை சேர்ந்த தொழிலதிபரிடம் அவரது தொழிலில் அரசு நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமானல் ரூ.20 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார். இது தொடர்பாக தொழிலதிபர் லஞ்சஒழிப்பு துறையில் புகார் அளித்திருந்தார். இதனை அடுத்து இன்று தர்மகரில் உள்ள அவரது இல்லத்தில் புகார்தாரரிடமிருந்து ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, ​​லஞ்சஒழிப்பு அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரியை பிடித்தனர்.

இதனை அடுத்து லஞ்சஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.47 லட்சம் கூடுதலாக கைப்பற்றப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டம், 2018 இன் பிரிவு 7 இன் கீழ் லஞ்சஒழிப்பு துறைவழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக மேலும் சோதனைகள் நடந்து வருவதாக லஞ்சஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் முன்பு ஐஎஃப்எஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாரிபாடாவில் வனத்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தார்.

The post ஒடிசாவில் சார் ஆட்சியராக பணியாற்றி வரும் திமான் சக்மா தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை லஞ்சமாக பெறும்போது பிடிபட்டார் appeared first on Dinakaran.

Read Entire Article