மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 1,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 131 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 189 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. வரத்தை காட்டிலும் நீர்திறப்பு பலமடங்கு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 112.94 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலை 112.64 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 82.21 டிஎம்சியாக உள்ளது.
The post ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2,000 கனஅடியாக உயர்வு appeared first on Dinakaran.