ஒகேனக்கல் காவிரியில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி

8 months ago 51

பென்னாகரம், செப்.29: வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சியை, தீயணைப்பு மீட்பு குழுவினர் மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். எதிர்வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை பெய்ய துவங்கும் நிலையில் கலெக்டர் சாந்தி உத்தரவின் பேரில் ஆறு உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளில் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவும், மழைக்காலங்களில் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்து பல்வேறு செய்முறை விளக்கங்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டன. இதில் தீயணைப்பு மீட்பு குழு வீரர்கள், போலி ஒத்திகை பயிற்சி மேற்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

The post ஒகேனக்கல் காவிரியில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article