ஐ.பி.எல்.: முதல் அணியாக டாப் 2 இடத்தை உறுதி செய்யப்போவது யார்..? மும்பை - பஞ்சாப் இன்று மோதல்

1 day ago 4

ஜெய்ப்பூர்,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று நாளையுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்டன. இருப்பினும் புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்தை பிடிப்பதற்கு இந்த ஆட்டத்தின் முடிவு அவசியமாகும்.

தற்போது 16 புள்ளிகளுடன் உள்ள மும்பை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்தினால் 18 புள்ளியை எட்டும். குஜராத்தை (18 புள்ளிகள்) விட ரன்ரேட்டில் வலுவாக இருப்பதால் மும்பைக்கு டாப்-2 இடம் உறுதியாகி விடும். தோற்றால் 4-வது இடத்திலேயே நீடிக்கும்.

அதேவேளை 17 புள்ளிகள் பஞ்சாப் அணி மும்பையை வீழ்த்தினால் அதன் புள்ளிகள் 19-ஆக உயரும். அப்போது அந்த அணிக்கு டாப்-2 இடங்கள் உறுதியாகும். கடைசி லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, லக்னோவை தோற்கடித்தாலும் பிரச்சினை இருக்காது. மாறாக பஞ்சாப் தோற்றால் 3 அல்லது 4-வது இடத்தில் இருக்கும். அதனால் இன்றைய ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article