ஐ.பி.எல். 2025: வீரர்களுக்கு சிறப்பு பரிசு.. ஒவ்வொரு போட்டிக்கும் ரூ. 7.5 லட்சம்.. ஜெய்ஷா அறிவிப்பு

2 hours ago 4

பெங்களூரு,

அடுத்த ஆண்டு (2025) ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதனையொட்டி ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மும்பையில் சமீபத்தில் நிறைவடைந்தது.

இதில் அனைத்து ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் பல்வேறு அணிகள் தரப்பிலும் ஏராளமான கருத்துகளை பெற்றுக் கொண்ட பிசிசிஐ, அதுகுறித்து விரிவாக ஆலோசித்து வருகிறது. இதனால் ஐ.பி.எல். ரிடென்ஷன் பாலிசி விதிமுறைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் பெங்களூருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள என்சிஏ அலுவலகத்தில் பி.சி.சி.ஐ. பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஐ.பி.எல். தொடரில் அனைத்து வீரர்களுக்கும் போட்டிக்கான ஊதியமாக ரூ.7.5 லட்சம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தனது எக்ஸ் பக்கத்தில், "நமது கிரிக்கெட் வீரர்களுக்கு ஐ.பி.எல். தொடரிலும் போட்டிக்கான ஊதியமாக ரூ.7.5 லட்சம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்கிறோம். இதன் மூலமாக ஐபிஎல் தொடரின் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடும் வீரர்களால் ரூ.1.05 கோடி ஊதியமாக பெற முடியும். இதற்காக ஒவ்வொரு அணியும் ரூ.12.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

In a historic move to celebrate consistency and champion outstanding performances in the #IPL, we are thrilled to introduce a match fee of INR 7.5 lakhs per game for our cricketers! A cricketer playing all league matches in a season will get Rs. 1.05 crores in addition to his…

— Jay Shah (@JayShah) September 28, 2024
Read Entire Article