ஐ.பி.எல்.2025-ன் சிறந்த அணி: ஆகாஷ் சோப்ரா தேர்வு.. 2 சிஎஸ்கே வீரர்களுக்கு இடம்

13 hours ago 3

மும்பை,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 3-ம் தேதி நிறைவு பெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது.

இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை கொண்டு பல முன்னாள் வீரர்கள் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தான் தேர்வு செய்த சிறந்த அணியை அறிவித்துள்ளார். அந்த அணியில் பிரெவிஸ் மற்றும் நூர் அகமது ஆகிய 2 சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை தேர்வு செய்துள்ளார். ஆனால் சுப்மன் கில், பில் சால்ட் ஆகியோரை அவர் தேர்வு செய்யவில்லை.

அத்துடன் மிட்செல் மார்ஷ், ஹர்திக் பாண்ட்யா, நமன் திர் மற்றும் ஹர்ப்ரீத் பிரார் ஆகியோரை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த ஐ.பி.எல்.2025-ன் சிறந்த அணி:

சாய் சுதர்சன், விராட் கோலி, ஜோஸ் பட்லர், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், பிரெவிஸ், குருனால் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா, நூர் அகமது, ஜோஷ் ஹேசில்வுட், பிரசித் கிருஷ்ணா.

இம்பேக்ட் வீரர்கள்: மிட்செல் மார்ஷ், ஹர்திக் பாண்ட்யா, நமன் திர் மற்றும் ஹர்ப்ரீத் பிரார்.


Read Entire Article