ஐ.பி.எல்.2025: அன்கேப்டு வீரர்களை கொண்ட அணி.. ஆகாஷ் சோப்ரா தேர்வு.. சிஎஸ்கே வீரருக்கு இடமில்லை

3 weeks ago 8

மும்பை,

சமீபத்தில் நிறைவடைந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது.

இந்த சீசனில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத (அன்கேப்டு) பல வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி சதமடித்து வரலாறு படைத்தார். மேலும் பஞ்சாப் அணியில் பிரியன்ஷ் ஆர்யா, சென்னை அணியில் ஆயுஷ் மாத்ரே என பலர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்நிலையில் இந்த சீசனில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அன்கேப்டு வீரர்களை கொண்ட பிளேயிங் லெவனை இந்திய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்து அறிவித்துள்ளார். அந்த அணியில் சிஎஸ்கே வீரரான ஆயுஷ் மாத்ரேவை அவர் தேர்வு செய்யாமல் ஆச்சரியமளித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த அன்கேப்டு பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

பிரம்சிம்ரன் சிங், பிரியன்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, நேஹல் வதேரா, ஷசாங்க் சிங், நமன் திர், விப்ராஜ் நிகம், ஹர்ப்ரீத் பிரார், யாஷ் தயாள், விஜயகுமார் வைஷாக், அன்ஷுல் கம்போஜ்.

Read Entire Article