ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு

6 months ago 22


சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது. விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கும் முன்பே இயந்திரக்கோளாறை விமானி கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார். விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு உடனடியாக பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர். இயந்திரக்கோளாறை விமானி கண்டுபிடித்ததால் 240 பயணிகள் உட்பட 250 பேர் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர். பயணிகள் அனைவரும் சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

The post ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு appeared first on Dinakaran.

Read Entire Article