ஏமனில் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் 8 பேர் பலி

1 week ago 6

துபாய்: ஏமனில் அமெரிக்க தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர் என்றும் 19 பேர் காயமடைந்தனர் என ஹவுதிகள் தெரிவித்தனர். செங்கடலில் செல்லும் வணிக கப்பல்கள் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏமனில் உள்ள ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.

டிரம்ப் அதிபரான பிறகு அமெரிக்க ராணுவம் ஏமன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சனா அருகில் உள்ள ஹொடைடா பகுதியில் நேற்று அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். மேலும்,ஏமனின் அம்ரான் மாகாணத்தில் அமெரிக்கா குண்டுவீச்சில் தொலைதொடர்பு கருவிகள் சேதமடைந்தன.

இதன் பின்னர் ஜெபல் நுக்கம், தமார் மற்றும் இப் ஆகிய மாகாணங்களிலும் குண்டுகள் வீசப்பட்டன. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர் என்று ஹவுதிகள் தெரிவித்தனர்.

The post ஏமனில் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் 8 பேர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article