ஏப்.30ம் தேதி சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பத்திரப்பதிவுத் துறை அறிவிப்பு

3 hours ago 3

சென்னை: மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

தற்போது சித்திரை மாதத்தின் மங்களகரமான தினமான 30.04.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதனை ஏற்று சித்திரை மாதத்தின் மங்களகரமான தினமான 30.04.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

The post ஏப்.30ம் தேதி சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பத்திரப்பதிவுத் துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article