பெரம்பலூர், பிப்.6: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில் நடந்த சிறப்பு மனு முகாமில் 31 மனுக்கள் பெறப்பட்டன. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் நேற்று (5ஆம்தேதி) மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனுமுகாம் நடைபெற்றன. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட மாவட்ட எஸ்பி பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்றார். இந்த சிறப்பு மனு முகாமில் பெரம்பலூர் டிஎஸ்பி (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) பிரபு மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு மனுமுகாம் மூலம் 31 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்டகாவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த முகாமில் பேசிய பெரம்பலூர் மாவட்ட எஸ்பி, ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும். பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன் படுத்திக் கொள்ள வேண் டும். மனு விசாரணை முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் மாவட்டஎஸ்பி அலுவலகம் வருவதற்கு ஏதுவாக மாவட்ட காவல் துறை சார்பாக பாலக் கரையிலிருந்து மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கும் மீண்டும் மாவட்ட எஸ்பி அலுவலகத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்ல பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
The post எஸ்பி அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு முகாம் appeared first on Dinakaran.