எழும்பூர், திருவல்லிக்கேணி அரசு தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு இணையதளம் - மருத்துவ மாணவி அசத்தல்

4 months ago 28

சென்னை: மகப்பேறு, குழந்தை பிறப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன் எழும்பூர், திருவல்லிக்கேணி அரசு தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் பயன்பெறுவதற்காக முதுநிலை மருத்துவ மாணவி மருத்துவர் வித்யா இதை உருவாக்கியுள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் கீழ் எழும்பூரில் அரசு தாய் சேய் நல மருத்துவமன மற்றும் திருவல்லிக்கேணியில் அரசு கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை செயல்படுகிறது. இரண்டு மருத்துவமனைகளுக்கும் தினமும் 350-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். கர்ப்பிணிகளுக்கு உதவிடும் வகையில் இரண்டு மருத்துவமனைகளுக்கும் சேர்த்து www.iogkgh.org.in என்ற இணையதளம் மற்றும் இணையதளதுக்குள் செல்வதற்கான கியூ ஆர் கோடை முதுநிலை மகப்பேறு மருத்துவம் படிக்கும் மருத்துவர் வித்யா உருவாக்கியுள்ளார்.

Read Entire Article