சென்னை: “படைப்பாளிகளை, அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும். எழுத்தாளரைப் போற்றும் சமூகம்தான் உயர்ந்த சமூகமாக இருக்க முடியும்,” என்று சாகித்ய அகாடமி மற்றும் JNU பல்கலை. தமிழ்த்துறை இணைந்து நடத்திய கருணாநிதி நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 27) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், சாகித்ய அகாடமி மற்றும் ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகம் சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் கருணாநிதி நூற்றாண்டுக் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இலக்கியத்தின் வழி இந்தியர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் மகத்தான பணியினை சாகித்ய அகாடமி செய்து வருகிறது.