எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

6 months ago 20

கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த அக்டோபர் மாதம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோப்படை மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 10-ந்தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டை பெற்று மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் புதுக்கோட்டையைச் சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட 15 மீனவர்களும், இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 11 மீனவர்கள் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் 4 மீனவர்களை விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை appeared first on Dinakaran.

Read Entire Article