எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்துக்கு சீல்!

2 months ago 11


சென்னை: தியாகராயர் நகரில் உள்ள பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் உரிமத்தை வேளாண்துறை அதிகாரிகள் ஏற்கெனவே ரத்து செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குன்றத்தூரில் தனியார் வங்கி மேலாளர் வீட்டில் எலித் தொல்லையை கட்டுப்படுத்த மருந்து வைக்கப்பட்டது. அளவுக்கு அதிகமாக எலி மருந்து வைக்கப்பட்டதால் அதிலிருந்து பரவிய நெடியால் 2 குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

ஏ.சி. அறையில் எலித் தொல்லைக்காக வைத்த மாத்திரையில் இருந்து பரவிய நெடியால் கடந்த 14-ம் தேதி 2 குழந்தைகள் உயிரிழந்தனர். 2 குழந்தைகள் பலியான சம்பவத்தில் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் ஊழியர்கள் 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அருகே வீட்டில் எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் பலியான சம்பவத்தில் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

The post எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்துக்கு சீல்! appeared first on Dinakaran.

Read Entire Article