எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீயில் எரிந்து நாசம் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

1 month ago 12

திங்கள்சந்தை, மே 6: குளச்சல் அருகே உள்ள பூக்குழி பகுதியைச் சேர்ந்தவர் சுனில் குமார். தனியார் மீன்பிடி துறைமுகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நேற்று முன்தினம் தேவாலயத்துக்கு சென்று விட்டு, மதியம் வீட்டின் முன் ஸ்கூட்டரை நிறுத்தி இருந்தார். திடீரென ஸ்கூட்டர் தீ பிடித்தது. தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி ஸ்கூட்டர் முழுவதும் எரிந்து நாசமானது. தீயின் வேகத்தில் அருகில் இருந்த ஜன்னல், பேன் மற்றும் ஒயர், ஸ்விட்ச் போர்டு ஆகியவையும் எரிந்தன. மேலும் அருகில் இருந்த புல்லட் ஒன்றும் எரிந்து சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. சுனில் குமார் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தி உள்ளார். இந்த கேமராவில் ஸ்கூட்டர் தீ பிடித்து எரியும் காட்சிகள் பதிவாகி சமூக வலைதளங்களின் வைரலாகி வருகிறது. சம்பவம் பற்றி அறிந்ததும் குளச்சல் போலீசார் சென்று விசாரித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடந்தது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

The post எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீயில் எரிந்து நாசம் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article