
சென்னை,
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் மே 7-ந்தேதி தொடங்கியது. இதுவரை, 2.90 லட்சம் மாணவர்கள் விண்ணபித்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது. ஜூன் 4-ந்தேதி (நேற்று) மாலை 6மணி நிலவரப்படி, 2 லட்சத்து 90 ஆயிரத்து 678 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 337 மாணவர்கள், 1 லட்சத்து 5 ஆயிரத்து 395 மாணவிகள் என மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 732 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். இதுவரை விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், நாளைக்குள் (வெள்ளிகிழமை) ww.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.