
சென்னை,
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 7-ந்தேதி தொடங்கியது. பதிவு ஆரம்பித்ததில் இருந்தே மாணவ-மாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
அந்த வகையில் தினமும் குறைந்தது 5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 28 ஆயிரம் பேர் வரை இதுவரை விண்ணப்பித்துள்ளனர். நேற்று வரையிலான தகவலின்படி, 2 லட்சத்து 26 ஆயிரத்து 503 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருக்கின்றனர்.
விண்ணப்பித்தவர்களில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 404 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியும், 1 லட்சத்து 14 ஆயிரத்து 210 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தும் இருப்பதாக தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.