என்எல்சி நிர்வாகம் - ஒப்பந்த தொழிலாளர் விவகாரம்: பேச்சுவார்த்தை குழுவை அணுக உத்தரவு

2 months ago 12

சென்னை: என்எல்சியில் வேலை பார்த்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து என்எல்சி நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சென்னை உயர் நீதிமன்றம், "இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தொழில் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள என்எல்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில், 6 மாதங்களில் உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும்" என உத்தரவிட்டது.

Read Entire Article