என் மூச்சு இருக்கும்வரை பாமகவுக்கு நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவர்தான்: ராமதாஸ் பேட்டி

5 hours ago 2

சென்னை: என் மூச்சு இருக்கும்வரை பாமகவுக்கு நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவர்தான் என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே தொடர் மோதல் வெடித்து வருகிறது. இதுவரை 150-க்கும் மேற்பட்ட பாமக நிர்வாகிகளும் 15-க்கும் மேற்பட்ட வன்னியர் சங்க நிர்வாகிகளும் மாற்றப்பட்டு இருக்கின்றனர். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறைந்த இடைவெளியே இருக்கும் நிலையில் பாமகவின் மோதலால் நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், சிலரை தவிர பாமவில் பெரும்பாலோர் ராமதாஸால் நீக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், விழுப்புரம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில்,

பிரச்சனை குறித்து பேசிக்கொண்டே இருக்கிறோம்: ராமதாஸ்

அன்புமணி உடனான பிரச்சனை குறித்து பேசினோம்; பேசிக்கொண்டே இருக்கிறோம். எல்லாவற்றுக்கும் முடிவு வரும், ஆனால் முடிவு இன்னும் வரவில்லை.

எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு: ராமதாஸ்

எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு; அந்த முடிவு வரலாம். அன்புமணி மன்னிப்பு கேட்பது பிரச்சனை அல்ல; நான் தொடங்கிய கட்சியில் நான் சொல்கிறபடி அவர் செயல்பட வேண்டும்.

என் மூச்சு இருக்கும்வரை நானே தலைவர்

என் மூச்சு இருக்கும்வரை பாமகவுக்கு நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவர்தான் என தெரிவித்தார்.

அன்புமணி செயல் தலைவர் மட்டுமே

கலைஞர் தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் எந்த முணுமுணுப்பையும் வெளிப்படுத்தவில்லை.

நான் நியமித்தவருக்கே நிரந்தர பொறுப்பு; ராமதாஸ்

என்னால் நியமிக்கப்பட்ட அனைவருக்கும் நிரந்தர பொறுப்புதான்.

அன்புமணி புறக்கணிப்பு – கண் கலங்கிய ராமதாஸ்

ராமதாஸின் 60வது மணவிழாவை அன்புமணி புறக்கணித்தது குறித்த கேள்விக்கு ராமதாஸ் கண் கலங்கினார். தைலாபுரம் தோட்ட வாசலில் இருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டது சில விஷமிகளின் செயல்.

பெரியார், அண்ணாவை இழிவுபடுத்தியதற்கு ராமதாஸ் கண்டனம்

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு எனக்கு அழைப்பு வரவில்லை. முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணாவை அவமதித்தது வருந்தக்கூடியது.

தலைவர்களை கொச்சைப்படுத்தக் கூடாது – ராமதாஸ்

தமிழ்நாட்டின் மக்களின் உள்ளங்களில் வாழும் தலைவர்களை கொச்சைப்படுத்தக் கூடாது.

கருத்தில் முரண்பாடு இருந்தாலும் தலைவர்களை கொச்சைப்படுத்தாதீர்

கருத்தில் முரண்பாடு இருந்தாலும் தலைவர்களை கொச்சைப்படுத்தக் கூடாது. எம்எல்ஏ அருள் பாமகவின் மாநில இணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட செயலாளர் பதவியுடன் கூடுதலாக மாநில இணை பொதுச்செயலாளராக அருள் நீடிப்பார். சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து அருளை அன்புமணி நீக்கி அறிவித்திருந்தார்.

5 பேர் பிடியில் அன்புமணி சிக்கியுள்ளாரா? – ராமதாஸ் பதில்

அன்புமணி 5 பேரின் பிடியில் சிக்கியிருப்பதாக அருள் கூறிய குற்றச்சாட்டு பற்றிய கேள்விக்கு தற்போது பதில் கூற முடியாது. ஆயிரம் கோயில்களுக்கு சென்று பூஜை செய்தால்தான் அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியும்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாமக பொதுக்குழு கூடும் – ராமதாஸ்

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாமக பொதுக்குழு கூடும் என ராமதாஸ் அறிவித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு – ராமதாஸ்

யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். கட்சிக்கு மிகவும் தேவையான செயல் தலைவர் பொறுப்பு அன்புமணிக்கு தரப்பட்டுள்ளது; அதை அவர் ஏற்றால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என தெரிவித்தார்.

The post என் மூச்சு இருக்கும்வரை பாமகவுக்கு நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவர்தான்: ராமதாஸ் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article