"என் மகன் சினிமாவில் சாதிப்பான் என்று நம்புகிறேன்" - விஜய் சேதுபதி

4 hours ago 2

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர், விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா சேதுபதி, 'பீனிக்ஸ்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்குகிறார். இந்த படத்தை பிரபல சண்டை பயிற்சியாளரான அனல் அரசு இயக்கியுள்ளார். இப்படம் வருகிற ஜூலை 4-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், இப்படத்தின் விழாவில் விஜய் சேதுபதி பங்கேற்று பேசும்போது, ''என் மகன் சூர்யாவை பொறுத்தவரை, முடிவுகளை அவனே எடுக்கட்டும் என்று விட்டுவிடுவேன். அவனது விஷயங்களில் பெரியளவில் நான் தலையிடுவது கிடையாது. இந்தப் படத்தின் பூஜை, படப்பிடிப்புகளுக்குக் கூட நான் செல்லவில்லை. என் மகனுக்கு இப்படி ஒரு அனுபவம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது முதல் படத்தில் எனக்கு ஏற்பட்ட படபடப்பு, இப்போதும் தொடர்கிறது. அவன் சாதிப்பான் என்று நம்புகிறேன். அவனை ஆளாக்குவது இனி ரசிகர்கள் கையில் இருக்கிறது'' என்றார்.

சூர்யா சேதுபதி பேசும்போது, ''பல பிரச்சினைகளை சந்தித்து, ஒவ்வொன்றையும் பாடமாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன். எனக்கு உறுதுணையாக இருந்த அத்தனை பேருக்கும் நன்றி. நிறைய தடுமாற்றங்கள் இருந்தாலும், யாரிடமும் சொன்னதில்லை. எல்லாவற்றையும் தாண்டி வந்திருக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன். ரசிகர்களின் கருத்துகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்'' என்றார்.

 

Read Entire Article