அதிமுக எம்எல்ஏவின் கோரிக்கையை ஏற்று, தாமதமின்றி பேருந்துகளை பேரவை வளாகத்துக்கு வரவைத்த போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், எம்எல்ஏக்களை அதில் ஏற்றி அனுப்பி வைத்தார்.
சட்டப்பேரவையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பொன்.ஜெயசீலன் நேற்று பேசியபோது, ‘‘பேரவை கூட்டம் முடிந்ததும் உறுப்பினர்களை எம்எல்ஏ விடுதிக்கு அழைத்து செல்லும் பேருந்துகள் தாமதமாக வருகின்றன. நேற்றுகூட அரைமணி நேரத்துக்கு மேல் வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, கூட்டம் முடிவதற்கு 2 நிமிடம் முன்பாக பேரவை வளாகத்தில் பேருந்துகளை நிறுத்த வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.