கீழ்வேளூர், பிப்.18: நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்த எட்டுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியின் இலக்கிய மன்ற விழா, விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா ஆண்டு விழாவாக பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிங்காரவேல் தலைமையில் நடைபெற்றது.பள்ளி மேலாண்மை குழு தலைவர் லேகா காரல் மார்க்ஸ் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் அருள்குமரன் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக ராஜ்குமார் கலந்து கொண்டு சொல்லின் சுவை என்ற தலைப்பில் பேசினார். பள்ளியில் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post எட்டுக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி ஆண்டுவிழா appeared first on Dinakaran.