எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!!

3 hours ago 1

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏப்.4 வரை எடப்பாடி பழனிசாமியின் மனு மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசியதாக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய மனுவை பழனிசாமி சிறப்பு நீதிமன்றத்தில் திரும்ப பெற்றுக் கொண்டதாக வாதம் முன்வைக்கப்பட்டது.

The post எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!! appeared first on Dinakaran.

Read Entire Article