பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், இது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
கரூர் மாவட்டம் நெரூர் சதாசிவ பிரம்மேந்திர கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆராதனை விழாவில் பக்தர்கள் உணவருந்திய எச்சில் இலையில் நேர்த்திக்கடனாக அங்கப்பிரதட்சணம் செய்வது வழக்கம். இதற்கு உயர் நீதிமன்றம் 2015-ல் தடை விதித்தது.