“எங்காவது போய்விட வேண்டும்... உயிரோடு இருக்கக் கூடாது!” - பாமக குழப்பதால் ஜி.கே.மணி வேதனை

1 day ago 6

தைலாபுரம்: “நான் இரண்டு முடிவு எடுத்துள்ளேன். உங்களுக்கும், என்னுடைய குடும்பத்துக்கும், இந்த நாட்டுக்கும் தெரியாமல், எங்காவது போய்விட வேண்டும். அதாவது, யார் கண்ணிலும் படாமல் ஓடிப்போய்விட வேண்டும். அப்படி இல்லை என்றால் நான் உயிரோடு இருக்கக்கூடாது. இந்த இரண்டுதான் என்னுடைய முடிவு என்ற நிலையில் இருக்கிறேன்,” என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி இன்று (மே 31) தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “இதை நான் சொல்லக்கூடாது. சொன்னால் பாமக நிறுவனர் ராமதாஸ் என் மீது கோபப்படுவார். வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்திக்க வேண்டாம். செய்தியாளர்கள் ஏதாவது கேட்பார்கள், எனவே செய்தியாளர் சந்திப்பு வேண்டாம் என்று கூறிவிட்டுத்தான் சென்றோம். ஆனால், ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அது பெரிய செய்தி ஆகிவிட்டது.

Read Entire Article