“எங்களை திட்டமிட்டு அவையில் இருந்து வெளியேற்றிவிட்டார் சபாநாயகர்” - இபிஎஸ்

2 days ago 3

சென்னை: “மக்களுக்காக தான் சட்டமன்றம், சட்டமன்றத்துக்காக மக்கள் இல்லை என்பதை பேரவைத் தலைவரும், முதல்வரும் உணர வேண்டும். எங்களை திட்டமிட்டு அவையில் இருந்து வெளியேற்றிவிட்டார் சபாநாயகர்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர முயற்சித்தார். ஆனால், முன்னதாகவே அனுமதி பெறாததால் தீர்மானத்தை கொண்டுவர பேரவைத் தலைவர் அப்பாவு அனுமதிக்கவில்லை. கவன ஈர்ப்பு விவாதத்துக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால், பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவர்களை ஒருநாள் கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்வதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

Read Entire Article