வாஷிங்டன்: உலகின் பெரும் பணக்காரரும், ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனமும், அதிபர் டிரம்பின் ஆலோசகருமான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான எக்ஸ்சின் உரிமையாளராகவும் உள்ளார். கடந்த 2022ல் ரூ.3.80 லட்சம் கோடிக்கு டிவிட்டரை வாங்கிய மஸ்க், அதை எக்ஸ் என பெயர் மாற்றம் செய்தார். ஊழியர்களை குறைத்தார், விதிமுறைகளை மாற்றினார்.
இந்நிலையில், எக்ஸ் சமூக வலைதளத்தை தனக்கு சொந்தமான எக்ஸ்ஏஐ நிறுவனத்திற்கு ரூ.2.87 லட்சம் கோடிக்கு விற்பனை செய்திருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.டிவிட்டரை வாங்கிய அடுத்த ஆண்டு, ஓபன்ஏஐ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு போட்டியாக எக்ஸ்ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனத்தை மஸ்க் தொடங்கினார். இது தற்போது ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான மிகப்பெரிய ஏஐ நிறுவனமாக வளர்ந்துள்ளது.
The post எக்ஸ் சமூக வலைதளத்தை விற்பனை செய்தார் எலான் மஸ்க் appeared first on Dinakaran.