ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளாகும் அரசு அதிகாரிகள் அனைத்து பண பலன்களுடனும் ஓய்வு பெற ஒருபோதும் அனுமதிக்க கூடாது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த கோகிலா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ள தனது கணவர், சிறையில் பார்த்த வேலைகளுக்கு கடந்த 4 மாதமாக சம்பளம் கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர் என தெரிவித்திருந்தார்.