
10, 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பேசினார். அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:
- மாணவர்களையும் பெற்றோர்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
- நீட் மட்டும்தான் உலகமா? அதைதாண்டி பல்வேறு விஷயங்கள் உள்ளன
- இதுவரைக்கும் ஊழலே செய்யாதவர்களை தேர்வு செய்யுங்கள்
- முறையான ஜனநாயகம் இருந்தால்தான் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும்.
- படிப்பு முக்கியம்தான் ஆனால் மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள்
- வரும் தேர்தலில் வண்டி வண்டியாக பணத்தோடு வருவார்கள். மக்களிடம் கொள்ளையடித்த பணம்தான் அது
- ஜனநாயக கடமை முக்கியம்: காசுக்காக ஓட்டுப்போடும் கலாசாரம் முடிவுக்கு வர வேண்டும்
- அடுத்த வருடம் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கே தெரியும்.
- மாணவர்களிடம் சாதி, மத சிந்தனை கூடாது,
- பெரியாருக்கே சாதி சாயம் பூசும்படி கேள்வி கேட்கிறார்கள்.
- பெரியாருக்கு சாதி சாயம் பூச முற்படுவது கண்டனத்திற்குரியது.
- மத்திய அரசு நடத்திய யுபிஎஸ்சி தேர்வில் சாதிய சாயம் பூசுவது போல கேள்வி இடம் பெற்றது கண்டித்தக்கது.
- போதைப்பொருளை போல சாதியையும் மதத்தையும் ஒதுக்கி வையுங்கள்சாதி, மத பிரிவினைவாத சிந்தனைகள் பக்கம் செல்லாதீர்கள்.
- தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் சிந்தனையோடு இருங்கள், அதுதான் ஏஐ உலகத்தை எதிர்கொள்ள ஒரே வழி
இவ்வாறு அவர் பேசினார்.