ஊழலே செய்யாதவர்களை தேர்வு செய்ய வேண்டும்: மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு

1 day ago 2

10, 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பேசினார். அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:

  • மாணவர்களையும் பெற்றோர்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
  • நீட் மட்டும்தான் உலகமா? அதைதாண்டி பல்வேறு விஷயங்கள் உள்ளன
  • இதுவரைக்கும் ஊழலே செய்யாதவர்களை தேர்வு செய்யுங்கள்
  • முறையான ஜனநாயகம் இருந்தால்தான் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும்.
  • படிப்பு முக்கியம்தான் ஆனால் மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள்
  • வரும் தேர்தலில் வண்டி வண்டியாக பணத்தோடு வருவார்கள். மக்களிடம் கொள்ளையடித்த பணம்தான் அது
  • ஜனநாயக கடமை முக்கியம்: காசுக்காக ஓட்டுப்போடும் கலாசாரம் முடிவுக்கு வர வேண்டும்
  • அடுத்த வருடம் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கே தெரியும்.
  • மாணவர்களிடம் சாதி, மத சிந்தனை கூடாது, 
  • பெரியாருக்கே சாதி சாயம் பூசும்படி கேள்வி கேட்கிறார்கள்.
  • பெரியாருக்கு சாதி சாயம் பூச முற்படுவது கண்டனத்திற்குரியது.
  • மத்திய அரசு நடத்திய யுபிஎஸ்சி தேர்வில் சாதிய சாயம் பூசுவது போல கேள்வி இடம் பெற்றது கண்டித்தக்கது.
  • போதைப்பொருளை போல சாதியையும் மதத்தையும் ஒதுக்கி வையுங்கள்சாதி, மத பிரிவினைவாத சிந்தனைகள் பக்கம் செல்லாதீர்கள்.
  • தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் சிந்தனையோடு இருங்கள், அதுதான் ஏஐ உலகத்தை எதிர்கொள்ள ஒரே வழி 

இவ்வாறு அவர் பேசினார். 

Read Entire Article