ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க நிர்வாகிகளை அவமதித்த பெரம்பலூர் ஆட்சியரைக் கண்டித்து ஏப். 1,2,8-ம் தேதிகளில் தொடர் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.ராமமூர்த்தி, பொதுச் செயலாளர் பா.ரவி ஆகியோர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன் உள்ளிட்டோர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையீடு அளிப்பதற்காக ஆட்சியர் அலுவலகம் சென்றுள்ளனர்.