ஊத்தங்கரையில் மது விற்ற மூதாட்டி கைது

2 months ago 12

ஊத்தங்கரை, டிச.17: ஊத்தங்கரை காவல்நிலைய போலீஸ் எஸ்ஐ மோகன் மற்றும் போலீசார், நேற்று சென்னப்பநாயக்கனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த மூதாட்டியை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் அதே பகுதியை சேர்ந்த ராமாக்கா (70) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post ஊத்தங்கரையில் மது விற்ற மூதாட்டி கைது appeared first on Dinakaran.

Read Entire Article