ஊதிய பலன்கள் அரசாணை குறித்து ஒரே மாதிரியான கருத்தை மருத்துவ சங்கங்கள் தெரிவித்தால் நிறைவேற்ற தமிழக அரசு தயாராக உள்ளது என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மருத்துவர் ஜெ.சங்குமணி தெரிவித்துள்ளார்.
‘மருத்துவர் லட்சுமி நரசிம்மனின் உயிர்த் தியாகத்துக்கு மதிப்பில்லையா?’ என்ற தலைப்பில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போரட்டக்குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை எழுதிய கட்டுரை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நேற்று வெளியாகி இருந்தது.