ஊட்டி:ஆண்டுதோறும் கோடை காலங்களில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் மட்டும் ஊட்டியில் சினிமா ஷூட்டிங் நடத்த தடை விதிக்கப்படுகிறது. கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டிக்கு வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என கடந்த பல ஆண்டுகளாக கோடை காலமான ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் 31ம் தேதி வரை 3 மாதங்கள் சினிமா ஷூட்டிங் நடத்த தோட்டக்கலைத்துறை தடை விதிப்பது வழக்கும். இந்த ஆண்டும் இன்று முதல் மே மாதம் 31ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உட்பட தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் ஷூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்து.
The post ஊட்டி பூங்காக்களில் சினிமா ஷூட்டிங் நடத்த தடை appeared first on Dinakaran.