ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் சிவப்பு நிற சால்வியா மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

2 months ago 13

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துகுலுங்கும் சிவப்பு நிற சால்வியா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இரண்டாவது சீசனையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் சால்வியா, பேன்சி, அம்ரந்தஸ் உள்ளிட்ட பல்வேறு மலர்கள் பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்கியது. இந்த மலர் அலங்காரங்களை கடந்த 2 மாதங்களாக ஊட்டிக்கு சுற்றுலா வந்த பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். தற்போது பூங்காவில் உள்ள அனைத்து மலர் செடிகளும் காய்ந்து போனது.

மேலும் தொட்டிகளில் வைக்கப்பட்டிருந்த மலர் செடிகளும் வாடி உள்ளது. ஆனால் பூங்கா முழுவதும் தற்போது சிவப்பு நிறத்தில் பூத்துள்ள சால்வியா மலர்கள் மட்டும் வாடாமல் உள்ளது. குறிப்பாக பூங்காவிற்குள் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் சிவப்பு நிறத்தில் பூத்துள்ள இந்த சால்வியா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர்களை கண்டு ரசித்து செல்வதுடன், அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

The post ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் சிவப்பு நிற சால்வியா மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article