உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டண பாக்கி 3 ஆண்டுகளில் ரூ.3,351 கோடி அதிகரிப்பு 

3 months ago 15

சென்னை: தமிழத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மின்கட்டண பாக்கி கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.3,351 கோடி அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளான 25 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 329 டவுன் பஞ்சாயத்துக்கள் மற்றும் 385 ஒன்றியங்களில் உள்ள 12,524 ஊராட்சிகளில் குடிநீர், தெருவிளக்கு, கழிப்பறை போன்றவற்றுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், குடிநீர் வாரியம் போன்றவற்றுக்கும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், உள்ளாட்சி அமைப்பு உள்ளிட்ட அரசு துறைகள், மின்வாரியத்துக்கு முறையாக மின்கட்டணத்தை செலுத்துவதில்லை. ஏற்கெனவே, தமிழக மின்வாரியத்தின் நிதிநிலை மோசமாக உள்ளது. இதைக் காரணம் காட்டி திமுக ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது.

Read Entire Article