உள்துறைச் செயலருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய ஆர்.எஸ். மங்கலம் இன்ஸ்பெக்டர்!

4 months ago 15

ராமேசுவரம்: தன் பணியில் தலையீடு இருப்பதாக கூறி ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் சரவணன், உள்துறைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளது தமிழக காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலத்தில் உள்ள காவல் நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ஆர்.சரவணன். இவர் தமிழக உள்துறைச் செயலருக்கு அனுப்பி உள்ள ராஜினாமா கடிதத்தின் விவரம்: ‘கடந்த 18.01.2008-ல் சார்பு ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டு 2020-ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அடைந்து காவல் துறையில் கடந்த 16 வருடங்களாக நன்முறையில் பணிபுரிந்து வருகிறேன். திருவாடானை உட்கோட்ட முகாம் அலுவலக எழுத்தர் தொடர்ந்து என்னிடம் கேட்காமல் ஆர்.எஸ்.காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு தன்னிச்சையாக தொடர்ந்து அலுவல்களை நியமித்து எனது நிர்வாகத்தில் தலையிட்டு நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்தி வருகின்றார்.

Read Entire Article